ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து: 4 பேர் பலி, 18 பேர் மீட்பு
நெல்லூர்: ஆந்திராவில் நெல்லூர் அருகே பேருந்து ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 4 பேர் பலியாகிவிட்டனர். 18 பேரை போலீசார் மீட்டனர். காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அம்மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லூரில் இருந்து கதிரிக்கு நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று சென்றது. இதில் 25 பேர் பயணம் செய்தனர்.இந்த பேருந்து செர்லோபள்ளியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட பேருந்தில் இருந்தவர்களை காப்பாற்ற அப்பகுதி கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
பேருந்தில் இருந்தவர்களை அப்பகுதியை சேர்ந்த சீனிவாசலு என்ற போலீஸ்காரர் உயிரை துச்சமாக கருதி தைரியமாக பேருந்தில் ஆபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டார்.
சீனிவாசலுவின் துணிச்சலை பார்த்தவுடன் அப்பகுதியை சேர்ந்த ஏட்டு மல்லிகார்ஜூனா, அல்லாபக்ஷா ஆகியோரும் உடன் சென்றனர்.
கடைசியில் பேருந்தில் பயணம் செய்த 25 பேரில் 18 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் மீட்கச் சென்றவர்களில் சீனிவாசலு மட்டும் உயிருடன் திரும்பினார். உடன் சென்ற மல்லிகார்ஜூனா, அல்லாபக்ஷா ஆகியோர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதே போன்று பேருந்தில் இருந்த கேசவாச்சாரி, வசந்தகுமாரி ஆகியோரும் பலியாகிவிட்டனர்.
பேருந்தில் மீதமுள்ள 5 பேரையும், மீட்பு பணிக்கு சென்ற இருவரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தன்னுடைய உயிரை பணயம் வைத்து 18 பேரை கயிறு மூலம் காப்பாற்றிய காவலர் சீனிவாசலுவை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications