திமுக தலைவருக்கு அதிமுக ஆதரவு
செங்கோட்டை: செங்கோட்டை நகராட்சியில் ஊழல் நடப்பதாகக் கூறி திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் ரகீம் (திமுக) தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியவுடன் தாமிரபரணி கூட்டு குடிநீர் நகரப் பகுதிகளில் சீரான வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. கவுன்சிலர்களை கலந்து ஆலோசித்து பின்னர் தான் பணிகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மேலும் மின்சார பொருட்களை ஒரே நபரிடம் வாங்குவதால் அது தரமற்று போய் விடுகிறது. இம்முறை அந்த நிறுவனத்தை மாற்ற வேண்டும். ஆடறுப்பு கட்டிடம் ரூ.20 லட்சத்தில் கட்டுவதை ரூ.10 லட்சத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கல்யாணி, பஞ்ச் பீர், அப்துல் காதர், காங்ிகரஸ் கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு நகராட்சி தலைவர் ரகீம் முடியாது என்று கூறவே மேற்கண்ட கவுன்சிலர்கள் 4 பேரும் இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் திமுக தலைவருக்கு ஆதரவாக கூட்ட அரங்கினுள்ளேயே இருந்தனர்.
மேலும் தற்போது சென்னை-தென்காசி இயங்கி வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வீரவாஞ்சி எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் தொடங்கியது முதல் முடிவு வரை ஒரே கூச்சலும், குழப்பமுமாக அவை இருந்தது.












Click it and Unblock the Notifications