தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்: கருணாநிதிக்கு ஜெ. கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Jayalalithaசென்னை: விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவரின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் கடந்த வெள்ளியன்று இலங்கை ராணுவப்படையினரால் விமானப்படை மூலம் குண்டுவீசி கொல்லப்பட்டார். இவருடைய மறைவிற்கு முதல்வர் கருணாநிதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ்ச்செல்வனுக்கு கவிதை மூலம் இரங்கல் தெரிவித்த கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதற்கு அதிகார பொறுப்பில் இருக்கும் முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளது அவரின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.

இதன் மூலம் அவர் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார் என்பது மிக தெளிவாக தெரிந்து விட்டது. இதற்காக கருணாநிதி முதல்வர் பொறுப்பிலிருந்து பதவி விலக வேண்டும்.

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இந்த அரசை கலைக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+