கிருஷ்ணசாமி தாக்குதல் வழக்கு: மேலும் 5 பேர் கைது
ராமநாதபுரம்: தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 29ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவிற்காக முதுகுளத்தூர் அருகே காரில் வரும்போது கீழகண்ணிசேரி என்ற இடத்தில் 50 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கிருஷ்ணசாமியைத் தாக்கியது.
இதில் வேல் கம்பால் குத்தியதில் கிருஷ்ணசாமி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேலும் 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த தமிழரசு, முனியசாமி, கருப்பையா, ரவி மற்றும் முத்து ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கீழகண்ணிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக இதுவரை 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications