கொச்சி அருகே பஸ் கவிழ்ந்து 60 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கொச்சி: கேரள மாநிலம் கொச்சி அருகே ஆற்றுப் பாலத்திலிருந்து தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 60 பேர் படுகாயமடைந்தனர்.
மூணாம்பம் - எர்ணாகுளம் மார்க்கத்தில் இயக்கப்படும் குருப்ரியா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து கொச்சி அருகே சென்று கொண்டிருந்தது. கோஸ்ரீ ஆற்றுப் பாலத்தின் மீது பேருந்து சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்றது.
அப்போது நிலை தடுமாறி பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தது. இதில் பேருந்தில் இருந்த 60 பேரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications