ஒரே இணைப்பில் கேபிள், இன்டர்நெட், போன் - விரைவில் பி.எஸ்.என்.எல். அறிமுகம்
சென்னை: கொல்கத்தா, பெங்களூர், புனே நகரங்களைத் தொடர்ந்து அடுத்து சென்னையிலும் ஒரே தொலைபேசி இணைப்பில், 3 சேவைகளை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நடந்த பி.எஸ்.என்.எல். நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் இதுகுறித்துக் கூறுகையில், டெலிபோன் கேபிள் மூலம் டெலிபோன், கேபிள் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றை வழங்கும் முறை கொல்கத்தா, புனே மற்றும் பெங்களூரில் அறிமுகப்படுத்தினோம். அதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே இந்தத் திட்டத்தை சென்னை நகரிலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் இந்த ஒரு போன் - 3 சேவைத் திட்டம் சென்னனை நகருக்கும் விரிவுபடுத்தப்படும். தனியார் ஒத்துழைப்புடன் இந்த சேவையை மேற்கொள்ளவுள்ளோம்.
பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் 20 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் கிராமப்புறங்களில் வழங்கப்படவுள்ளது. சென்னையில் கேட்டதும் கிடைக்கும் வகையில் பிராட்பேண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
பிராட்பேண்ட் இணைப்பு தேவைப்படுவோருக்கு கண்டிப்பாக லேண்ட்லோன் போன் இருக்க வேண்டும் என்பதால், போன் இணைப்புகளை சரண்டர் செய்வது வெகுவாக குறைந்து விட்டது என்றார் கோயல்.
சென்னை: கொல்கத்தா, பெங்களூர், புனே நகரங்களைத் தொடர்ந்து அடுத்து சென்னையிலும் ஒரே தொலைபேசி இணைப்பில், 3 சேவைகளை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நடந்த பி.எஸ்.என்.எல். நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் இதுகுறித்துக் கூறுகையில், டெலிபோன் கேபிள் மூலம் டெலிபோன், கேபிள் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றை வழங்கும் முறை கொல்கத்தா, புனே மற்றும் பெங்களூரில் அறிமுகப்படுத்தினோம். அதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே இந்தத் திட்டத்தை சென்னை நகரிலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் இந்த ஒரு போன் - 3 சேவைத் திட்டம் சென்னனை நகருக்கும் விரிவுபடுத்தப்படும். தனியார் ஒத்துழைப்புடன் இந்த சேவையை மேற்கொள்ளவுள்ளோம்.
பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் 20 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் கிராமப்புறங்களில் வழங்கப்படவுள்ளது. சென்னையில் கேட்டதும் கிடைக்கும் வகையில் பிராட்பேண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
பிராட்பேண்ட் இணைப்பு தேவைப்படுவோருக்கு கண்டிப்பாக லேண்ட்லோன் போன் இருக்க வேண்டும் என்பதால், போன் இணைப்புகளை சரண்டர் செய்வது வெகுவாக குறைந்து விட்டது என்றார் கோயல்.












Click it and Unblock the Notifications