குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
குஜராத்: குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலையில் லேசான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள ஜீனாகத் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் பயங்கரமாக ஆடின.
தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினர். இப்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஜீனாகத் மாவட்ட கலெக்டர் அஸ்வினிகுமார் கூறியதாவது,
இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் உணர்வு லேசாக தான் இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் எந்த உயிர்சேதமும், பொருட் சேதமும் ஏற்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications