கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் டோக்கன் மூலம் முன்பதிவு செய்யலாம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் கூடுதலாக 5 உடனடி முன்பதிவு கெளண்டர்களை திறந்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறுகையில்,
தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள நெரிசலை சமாளிக்க கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 இடங்களில் அவசர முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த முன்பதிவு கெளண்டர்கள் திருச்சி, மதுரை, கும்பகோணம், பெங்களூர், சேலம் மற்றும் கோவை ஆகிய நகர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிறப்பு பேருந்துகளுக்களுக்கான முன் பதிவு டோக்கன் வழங்கப்படும்.
இங்கு ரூ.10 கொடுத்து டோக்கன் வாங்கி பேருந்துகளில் அமர்ந்து கொள்ளலாம். இந்த டோக்கன் உள்ளவர்களுக்கு பஸ்களில் முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கடந்த இரு தினங்களில் மட்டும் மொத்தம் 3,000 பயணிகள் இந்த டோக்கன் பெற்று பயணம் செய்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications