முதுகுளத்தூருக்குள் நுழைய டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கலெக்டர் தடை
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நுழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தடை விதித்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த 29ம் தேதி தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை முதுகுளத்தூர் அருகே மர்ம கும்பல் சிலர் தாக்கி வேல் கம்பால் குத்தி விட்டனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக முதுகுளத்தூரில் நடைபெற்ற கலவரத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர் வின்சென்ட் சாலமன் என்பவர் பரிதாபமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜாதிக் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அரசு உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதிலும் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதுகுளத்தூருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வர உள்ளார். அவர் வந்தால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதால் கிருஷ்ணசாமி முதுகுளத்தூருக்குள் நுழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.
இதனால் அவர் வேறு வழியாக முதுகுளத்தூருக்குள் நுழையலாம் என்பதால் அம் மாவட்ட எல்லை முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.