கிரிக்கெட்-பாக். அமைச்சருக்கு இந்தியா விசா மறுப்பு
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை காண விரும்பிய பாகிஸ்தான் நாட்டு ரயில்வே அமைச்சருக்கு இந்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேக் ரஷீத் ஒருநாள் போட்டியை காண விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ரஷீத் கூறியதாவது,
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண விரும்பிய எனக்கு விசா மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நான் ஒரு பார்வையாளராக தான் வருகிறேன். ஆனால் எனக்கு விசா கொடுக்க மறுத்துள்ளதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நல்லுறவு பாதிக்கும் என்றார்.
ஷேக் ரஷீத்துக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ் இந்திய அரசிடம் விளக்க கேட்க உள்ளார்.












Click it and Unblock the Notifications