பட்டாசு வெடித்து சிறுமி உடல் கருகி பலி
புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் 12 வயது சிறுமி உடல் கருகி பலியானார்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்தியாவில் நேற்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி, சின்னக் காலாபேட்டை பகுதியில் கவிதா என்ற 12 வயது சிறுமி தனது வீட்டின் முன்பாக பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு வெடியை வெடித்தபோது அது தவறுதலாக கவிதா வைத்திருந்த பட்டாசுப் பண்டல் மீது விழுந்தது.
இதனால் அங்கு இருந்த அனைத்து வெடிகளும் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் கவிதாவின் உடல் கருகியது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்னொரு சம்பவத்தில் ஏராளமான குடிசை வீடுகள் பட்டாசுகள் வந்து விழுந்ததில் தீப்பிடித்து சேதமடைந்தன. ரூ. 50 ஆயிரம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை என்ற இடத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் தீப் பிடித்து எரிந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications