ஆசன வாயில் செல்போன் கடத்திய கைதி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மத்திய சிறைக்குள் ஆசன வாயில் வைத்து செல்போனைக் கடத்திய கைதி பிடிபட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த இப்ராகிம் என்பவரது மகன் ரபீக், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது சிறைக் காவலை நீட்டிப்பதற்காக திருவாடனை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். காவல் நீட்டிப்பு முடிந்து மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றனர்.

Prisoner

அப்போது சிறைக் காவலர்கள் ரபீக்கை சோதனை செய்த போது அவரது ஆசன வாயிலில், செல் போன் மற்றும் சிம் கார்டு ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அதிர்ச்சி அடைந்த சிறைக் காவலர்கள் செல்லையும், சிம்மையும் பறிமுதல் செய்தனர்.

இந்த செல்போனை, போதை பொருட்கள் கடத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கங்குஸ்தான் என்பருக்காக ரபீக் கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து சிறைக் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் கங்குஸ்தான், மற்றும் ரபிக் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பேரில் அவர்களை மீண்டும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+