பஸ் மோதி 2 ரயில்வே ஊழியர்கள் பலி
திருப்பதி: ரோட்டை கடக்க முயன்ற இருவர் மீது தனியார் பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பதி-சென்னை நெடுஞ்சாலையில் தென்னக ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டிகள் பழுது நீக்கும் நிலையம் (சி.ஆர்.எஸ்) உள்ளது. இங்கு வேலை பார்ப்பவர்களான நரசிம்குலு(55) மற்றும் காயத்ரி(50) ஆகிய இருவரும் நெடுஞ்சாலையின் ரோட்டை கடக்க முயன்றனர்.
அப்போது அரக்கோணத்திலிருந்து வந்த தனியார் பேருந்து ரோட்டை கடக்க முயன்றவர்கள் மீது பலமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் ரயில்வே ஊழியர்கள் மீது மோதிய தனியார் பஸ் டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி-சென்னை சாலையில் சி.ஆர்.எஸ் ஊழியர்கள் சாலை மறியல் செய்ததால் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications