கள்ளக்காதல்: மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!
சென்னை: தங்கையின் கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொன்ற கணவனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (35). இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி (29) என்ற மனைவியும், பிரபாகரன்(8) என்ற மகனும், பிருந்தா (7) என்ற மகளும் இருக்கிறார்கள்.
மகேந்திரன் பர்மா பஜார் பகுதியில் புரோக்கர் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் கொண்ட மகேந்திரன் தினமும் குடித்துவிட்டு மனைவி ஈஸ்வரியை வந்து அடித்து உதைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் வாழ்க்கை வெறுத்துப் போயிருந்த ஈஸ்வரிக்கும், மகேந்திரனின் தங்கை கணவர் ஐயப்பனுக்கும் இடையே, கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. மகேந்திரன் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த விஷயம் ஒருநாள் மகேந்திரனுக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் ஈஸ்வரியோ அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஐயப்பனுடன் கள்ளக் காதலை வளர்த்து வந்தார்.
இதனால் மீண்டும் மகேந்திரன் ஈஸ்வரியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் வெறுத்துப்போன ஈஸ்வரி, ஐயப்பனுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓடி விட்டார்.
இதுகுறித்து மகேந்திரன் போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டுபிடித்து அறிவுரைகள் கூறி ஈஸ்வரியை அவரது கணவர் மகேந்திரனுடன் அனுப்பி வைத்தனர்.
திரும்பி வந்தும் கூட ஈஸ்வரி - ஐயப்பன் உறவு தொடர்ந்தது. இதனால் மனம் வெறுத்துப்போன மகேந்திரன் நேற்றிரவு மனைவி ஈஸ்வரியுடன் சந்தோஷமாக இருப்பது போல் நடித்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்கச் செய்துள்ளார்.
பின்னர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரியை இன்று அதிகாலையில் கழுத்தை அறுத்து கொறு விட்டு தப்பி விட்டார். அதே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரியின் சகோதரிகள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐயப்பன் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications