'கட்டிப்பிடி- கிஸ்' எஸ்.ஐ. சஸ்பெண்ட் !
தர்மபுரி: தர்மபுரியில் பெண் போலீஸை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தர்மபுரியில் ஆயுதப்படையில் எஸ்.ஐயாக இருப்பவர் சரவணன். இவர் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படையில் இருந்ததால் பதவி உயர்வு பெற்று எஸ்.ஐ ஆனார்.
இந்நிலையில் கடந்த 3 ம் தேதி ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலரை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதை எதிர்பார்க்காத அந்த பெண் காவலர் இது குறித்து தர்மபுரி காவல் நிலையத்திலும், உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் புகார் செய்தார்.
அதன் பேரில் பெண் காவலர்க்கு முத்தம் கொடுத்த ஆயுதப்படை எஸ்.ஐ. சரவணன் மீது தர்மபுரி காவல் நிலையத்தில் மானபங்கப்படுத்துதல், மன உளைச்சல் ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி தர்மபுரி எஸ்.பி. நஜ்மல் ஹோடா, பெண் காவலர்க்கு முத்தம் கொடுத்த எஸ்.ஐ. சரவணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சேலம் டிஐஜி செண்பகராமனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் சரவணனை சஸ்பெண்ட் செய்து சேலம் டிஐஜி செண்பகராமன் உத்திரவிட்டார்.












Click it and Unblock the Notifications