For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதியில் சிறுவனை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதியில் பள்ளிக்கு சென்ற சிறுவனை கடத்திய கும்பல் அவனை விடுவிக்க ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது்.

திருப்பதியை சேர்ந்த குருமூர்த்த-திருவேணி தம்பதியின் மன் குருஸ். குருமூர்த்தி அப்பகுதியில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

குருஸ்ரீ அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியொன்றில் 5ம் வகுப்பு படித்து வருகி்றான். தினமும் ஆட்டோவில் செல்லும் அவனை நேற்று காலை பள்ளிக்கு செல்லும் போது 4 பேர் கொண்ட கும்பல் அவன் சென்ற ஆட்டோவை இன்னொரு ஆட்டோவில் பின் தொடர்ந்துள்ளது.

ஆட்டோ டிரைவர் குருஸ்ரீயை பள்ளியில் இறக்கிவிட்டவுடன், பின் தொடர்ந்த கும்பல் அவனை குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு கடத்திச்சென்றது.

பள்ளி சென்ற மகன் மாலை வீடு திரும்பாததால் குருஸ்ரீ வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருப்பதி அலிபிரி போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் நேற்றிரவில் குருமூர்த்திக்கு ஒரு மர்ம தொலைபேசி வந்தது. அதில் பேசியவன் உன் மகன் உயிருடன் வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் கொடுத்தால் ஒப்படைத்து விடுவோம். எங்கு வந்து பணம் தர வேண்டும் என்பதை பின்னர் சொல்கிறோம் என்று கூறி போனை வைத்து விட்டான்.

கடத்தல் கும்பல் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து அவர்கள் எந்த இடத்தில் இருந்து பேசினார்கள் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X