பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன- விமானப்படை தலைமைத் தளபதி

Subscribe to Oneindia Tamil

Roshan Goonetilekeகொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று இலங்கை விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் கூனதிலகே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது விடுதலைப் புலிகள் வன்னிப் பகுதியில் மிகக் குறுகிய இடத்திற்குள் சுருங்கி விட்டனர்.

எனவே பிரபாகரனைப் பிடிப்பது கடினமான காரியமாக நாங்கள் கருதவில்லை.

விடுதலைப் புலிகள் தலைவரின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் விமானப்படை வீரர்கள் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவர். மக்களும் விமானப்படைக்கு உதவ முன் வர வேண்டும். பிரபாகரன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

விமானப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு அதிபர் ராஜபக்சே முழு ஆதரவு தருகிறார். இலங்கை அரசும் முழு ஆதரவு தருகிறது என்று கூறியுள்ளார் கூனதிலகே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+