இம்ரான்கான் அதிரடி கைது
லாகூர்: லாகூரில் இன்று மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், நீதிக் கட்சித் தலைவருமான இம்ரான் கானை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் அங்கு கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. பெரும் திரளான எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசிர் பூட்டோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிக் கட்சித் தலைவரான இம்ரான் கானும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று லாகூரில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கு இம்ரான் கான் வந்தார்.
அவரைப் பார்த்ததும் மாணவர்கள் வியப்படைந்தனர். போலீஸாரோ அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இம்ரான் கானை சுற்றி வளைத்த போலீஸார் அவரைக் கைது செய்து குண்டுக் கட்டாக காரில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர்.












Click it and Unblock the Notifications