மருமகள் வாயில் 'ஆசிட்' ஊற்றிய மாமனார், மாமியார்!
டெல்லி: வரதட்சணை கொடுமையின் உச்சகட்டமாக, டெல்லியைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்து கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் ராதிகா (28). கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆனது.
திருமணம் ஆகி கணவர் வீட்டிற்கு சென்ற நாளிலிருந்து ராதிகா வரதட்சணை கொடுமைக்கு ஆளானார். தினந்தோறும் மாமியார், நாத்தனார்களின் சித்ரவதையை சந்தித்து வந்தார் ராதிகா.
இந்நிலையில் நேற்று ராதிகாவின் கணவரின் உறவினர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு ராதிகாவை வழக்கம் போல கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் டாய்லெட் கழுவ பயன்படுத்தப்படும் அமிலத்தைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் ராதிகா மறுத்துள்ளார். இருந்தாலும் விடாத அவர்கள் ராதிகாவை மிரட்டி குடிக்க செய்து விட்டனர். இதனால் அலறித் துடித்த ராதிகாவை அக்கம் பக்கத்தினர் அப்பல்லோ மருத்துவனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ராதிகா சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தான் தற்செயலாகத்தான் அமிலத்தைக் குடித்து விட்டதாக ராதிகா கூறியுள்ளார். ஆனால் அவரது மாமனார் வீட்டார்தான் இப்படிச் செய்து விட்டனர் என ராதிகாவின் பெற்றோர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications