இந்தியாவின் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
சென்னை: முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை முழுமையாக பரிசோதித்து இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள சோதனை மையத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் மேல் நிலையில் கிரையோஜெனிக் இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திரகிரி திரவ எரிபொருள் சோதனை மையத்தில் முழுமையான 720 விநாடிகளுக்கு கிரையோஜெனிக் இயந்திரத்தின் கிரவுண்ட் டெஸ்ட் நடத்தப்பட்டது. இந்த சோதனை எந்தவித பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சோதனையைத் தொடர்ந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்களில் பயன்படுத்தக் கூடிய தகுதியை இந்தியாவின் சுய சார்பு கிரையோஜெனிக் இயந்திரங்கள் பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு இந்தியா செலுத்தவுள்ள ஜிஎஸ்எல்வி-டி3 ராக்கெட்டில் இந்தியாவின் இந்த கிரையோஜெனிக் இயந்திரம் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி 480 விநாடிகளுக்கான கிரவுண்ட் டெஸ்ட் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம். தற்போது நடந்துள்ளது முழு அளவிலான (720 விநாடிகள்) சோதனையாகும்.
மகேந்திரகிரி சோதனை இஸ்ரோவின் வரலாற்றிலும், இந்திய விண்வெளியியல் வரலாற்றிலும் புதிய மைல் கல் ஆகும்.












Click it and Unblock the Notifications