28 டன் கடத்தல் அரிசு பறிமுதல்-கேரளாவுக்கு கடத்தல்
பொள்ளாச்சி: கேரளாவுக்கு லாரிகளில் கடத்தப்பட்ட 28 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல், மதுரையிலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
நேற்று பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் கோலார்பட்டியில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தரசு, சிவில் சப்ளைஸ் தாசில்தார் முத்துராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து வந்த 2 லாரிகளை அதிகாரிகள் வழி மறித்தனர். ஆனால் லாரிகளை டிரைவர்கள் நிறுத்தாமல் ரிவர்ஸ் எடுத்துக் கொண்டு வந்த வழியே வேகமாகத் திரும்பினர்.
அந்த லாரிகளை அதிகாரிகளும் ஜீப்பில் விரட்டினர். சுமார் 20 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று மடத்துக்குளம் அருகே லாரிகளை மடக்கினர்.
அந்த லாரிகளை சோதனையிட்ட போது மொத்தம் 28 டன் ரேஷன் அரிசி இருந்தது. அவை கேரளாவுக்கு செல்ல இருந்தவை.
இதையடுத்து லாரி டிரைவர்களான கிருஷ்ணமூர்த்தி, சதீஸ் இருவரையும் கைது செய்தனர்.
அரிசி தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications