நெல்லை மாவட்டத்தில் 46,000 வாக்காளர்கள் அவுட்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 46,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் இல்லை.
தமிழகம் முழுவதும் 2008ம் ஆண்டும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்கக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 11 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த முறை புகைப்பட வாக்காளர் பட்டியலில் 17.36 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்களார் பட்டியலில் 46,629 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 866 ஆண்களும், 8 லட்சத்து 58 ஆயிரத்து 351 பெண்களுமாக மொத்தம் 16 லட்சத்து 90 ஆயிரத்து 217 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆண் வாக்காளர்களை விட 26 ஆயிரத்து 485 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
இந்த பட்டியலில் பாளையங்கோட்டை தொகுதியில் அதிகபட்சமாக 18,000 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 224 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்களர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளின் விபரங்கள்:
சங்கரன்கோவில் தொகுதியில் 2,490 வாக்காளர்களும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 701 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 2,885, தென்காசி தொகுதியில் 1,165, ஆலங்குளம் தொகுதியில் 821, நெல்லை தொகுதியில் 13,570, பாளையங்கோட்டை தொகுதியில் 18,612, சேரன்மகாதேவி தொகுதியில் 1,681, அம்பாசமுத்திரம் தொகுதியில் 224, நாங்குநேரி தொகுதியில் 949, ராதாபுரம் தொகுதியில் 3,531 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரே மாவட்டத்தில் 46,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.