For Daily Alerts
Just In
இந்தோனேஷியா: சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்
ஜகார்தா: இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள பண்டா அச்சே என்ற இடத்திலிருந்து 113 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமியை ஏற்படுத்திய பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதும் இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலநடுக்கத்தால் சுமத்ரா தீவில் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் வீடுகளில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் போய் பாதுகாப்பாக நின்றனர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 17:45 [IST]