மலேசியாவில் போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது தடியடி
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு இன்று காலை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டனர்.
மலேசியாவில் தாங்கள் 2ம் தர குடிமக்களாக நடத்தப்படுவதைக் கண்டித்தும், தங்களது இந்த நிலைக்கு இங்கிலாந்து அரசுதான் காரணம், அவர்கள் தங்களை மலேசியாவில் குடியேற்றிய பின்னர் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இங்கிலாந்தின் நடவடிக்கையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு இழப்பீடு கோரியும் மனு கொடுக்க அவர்கள் திரண்டிருந்தனர்.
இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தைத் தவிர்க்குமாறு மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தியர்கள் அதை நிராகரித்து விட்டனர். 
உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு திரண்ட இந்தியர்களை மலேசியப் போலீஸார், தூதரகத்திற்கு 100 மீட்டர் தொலைவிலேயே தடுத்து நிறுத்தினர். ஆனால் அதை மீறி மனு கொடுக்க இந்தியர்கள் முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதலில் இறங்கினர். இதில் பல இந்தியர்கள் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தால் கோலாலம்பூரில் பரபரப்பு நிலவியது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications