சுமத்ராவில் நிலநடுக்கம் - சுனாமி ஆபத்தில்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமத்ரா தீவில் உள்ள பெங்குலு என்ற தீவின் முகோமுகோ என்ற இடத்திற்கு தென்கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் கடலில் 55 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.2 ரிக்டராக இருந்தது. சக்தி வாய்ந்த நில நடுக்கமாக இருந்தாலும் கூட இதனால் சுனாமி அலைகள் எழாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி இதே பகுதியில்தான் 8.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன என்பது நினைவிருக்கலாம்












Click it and Unblock the Notifications