பஸ் மரத்தில் மோதி ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார். 18 பயணிகள் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து சென்னைக்கு சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலையில் புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த சாகுல்ஹமீது (20) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் கீழக்கரையை சேர்ந்தவர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications