வேலூர் அருகே தீயில் கருகி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகே திருட்டுப் பெட்ரோலை பைக்கில் ஊற்றியபோது திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் அருகேயுள்ள காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (32). மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் இவர் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்று வருகிறார். நேற்றிரவு இவரது கடைக்கு இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் போட மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அவர்களுடைய பைக்கில் மோகன் பெட்ரோலை ஊற்றினார். அப்போது, பெட்ரோல் கை தவறி விழுந்ததில் பைக்கில் சூடாக இருந்த விளக்கின் மீது பட்டு குபீரென தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே மெக்கானிக் மோகன் மற்றும் பைக்கில் வந்த இருவரும் தீயில் கருகி இறந்தனர்.
போலீசார் விசாரணையில் தீயில் கருகி இறந்த மற்ற இருவர் சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் ரங்கநாதன் என்பது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications