சொத்துக்காக அக்காவை கொலை செய்த தம்பி
திருச்சி: சொத்துக்காக உடன் பிறந்த அக்காவின் மூக்கில் சேற்றை அமுக்கி படுகொலை செய்த தம்பி போலீசில் சரணடைந்தார்.
திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள அரசன்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (30). இவரது அக்கா முத்துலட்சுமி (40). கணவருடன் கச்சமங்கலத்தில் வசித்து வந்தார்.
முத்துலட்சுமிக்கு சொந்தமாக அரசன்குடியில் 2 காலி மனைகள் இருக்கிறது. ஆனால் அதற்கான பத்திரங்களை அவரின் தம்பி சக்திவேல் வைத்துள்ளார். தனது பெயரில் உள்ள பத்திரத்தை பலமுறை கேட்டும் சக்திவேல் கொடுக்காததால், முத்துலட்சுமி சக்திவேல் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அரசன்குடி வந்து பத்திரங்களை எடுத்து சென்று விட்டார்.
வீடு திரும்பிய சக்திவேல் பத்திரங்களை முத்துலட்சுமி எடுத்து சென்றதை அறிந்து தனது அக்காவின் வீட்டிற்கு ஆத்திரத்துடன் சென்றார். ஆனால் கோபத்தை காட்டினால் பத்திரத்தை வாங்க முடியாது என்று எண்ணி, சமாதானம் பேசியுள்ளார்.
தனது அக்காவிடம், நம் இருவரையும் பிரிப்பதற்காக யாரோ சிலர் சூனியம் வைத்து விட்டார்கள். அதனால் அதை நிவர்த்தி செய்து விட்டால் அனைத்தும் தீர்ந்து விடும் என்று சொல்லி காட்டுப் பகுதியில் உள்ள சாமியாரிடம் செல்வதற்காக அழைத்து சென்றுள்ளார்.
காட்டிற்குள் செல்லும் போது முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து, அவரின் சேலையை வைத்து வாயை கட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்த ஈர மண்ணை எடுத்து தனது அக்காவின் மூக்கில் திணித்தார். இதனால் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார் முத்துலட்சுமி.
அக்காவை கொலை செய்து விட்டு வீட்டிற்கு வந்த சக்திவேல், மன உளைச்சலில் தனது மனைவியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.












Click it and Unblock the Notifications