நாகர்கோவில் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய முடிவு?
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி தலைவரைக் கண்டித்து கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர்.
நாகர்கோவில் நகராட்சி தலைவராக அசோகன் சாலமன் உள்ளார். இவரது செயல்பாடுகள் துணைதலைவர் மற்றும் பிற கவுன்சிலர்களுக்கு அதிருப்தி அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் நகராட்சி மண்டல இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
மேலும் அசோகன் சாலமன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்து வந்தனர். ஆனால் அசோகனுக்கு ஆதரவாக சில கவுன்சிலர்கள் அணி மாறினர். இதனால் வெறுப்படைந்த பல கவுன்சிலர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகக் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications