அடகு நகையை மீட்க 27 வருடங்களாக போராடும் அப்பாவிகள்!
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் 27 வருடங்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகள் கொள்ளை போய் விட்டதால் அவற்றை மீட்க முடியாமல் 22 பேர் போராடிக் கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோம்பைப்பட்டியை சேர்ந்தவர்கள் காளியப்பன், பழனிசாமி, ஆறுமுகம். இவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வாசுகியிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர்.
அதில், எங்கள் வீட்டு நகைகளை கணக்கன்பட்டி கூட்டுறவு வங்கியில் அடகு வைத்தோம். கணக்கன்பட்டி கூட்டுறவு வங்கியில் கடந்த 1980ம் ஆண்டு 204 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அதில் பாதிக்கப்பட்ட 140 பேருக்கு உரிய நகைகளைமீட்டுத் திருப்பி கொடுத்து விட்டனர். 22 பேருக்கு மட்டும், அவர்களுக்குரிய 64 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் வங்கி காலம் தாழ்த்தி வருகிறது.
வங்கியில் போய் கேட்டால் மாவட்ட கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கேட்க சொல்லி அனுப்புகின்றனர். அவர்களிடம் கேட்டால் அவர்கள் வங்கியில் போய் கேட்கச் சொல்லுகின்றனர்.
எங்களது நகைகளை மீட்க முடியாமல் கடந்த 27 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகம், ஆகியவற்றிக்கு அலைந்து அலைந்து எங்கள் கால்கள் தேய்ந்து விட்டன. எங்களில் சிலர் வங்கியின் செயல்பாடுகளை நினைத்து நகை கிடைக்காது என எண்ணி இறந்தே போய்விட்டனர். நகைக்கு உரிய பணமும், வட்டியையும் கட்டிவிட்டோம். இருப்பினும் எங்களுக்கு நகை கிடைக்கவில்லை.
எனவே எங்கள் நகைகளை மீட்டுத் தருமாறு வேண்டுகிறோம் என கூறியிருந்தனர். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூறி கூட்டுறவு வங்கி இயக்குனருக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications