சர்ச்சைப் பகுதிகளை நீக்கும் தஸ்லிமா

சர்ச்சைப் புயலில் சிக்கியுள்ள தஸ்லிமா நஸ்ரின் தற்போது டெல்லியில் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பாதுகாப்பது தங்களது கடமை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு அவர் எழுதிய த்விகாந்தோ என்ற நூலில் இடம் பெற்றுள்ள சில சர்ச்சைப் பகுதிகளுக்கு எதிராக முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை முன்வைத்தே கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது.
இந்த நிலையில் த்விகாந்திதோ நூலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கி விட தஸ்லிமா தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கி விட நான் தீர்மானித்துள்ளேன். யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. எனது முடிவின் மூலம் நான் இந்தியாவில் அமைதியாக வாழ முடியும் என்று நம்புகிறேன் என்றார் தஸ்லிமா.
தஸ்லிமாவின் இந்த நூல் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளையும், கலவரங்களையும், மோதல்களையும் ஏற்பட வழி வகுத்துள்ளது.
த்விகாந்திதோ நூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கி விடுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த 29ம் தேதி தஸ்லிமாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், அடைக்கலம் என்று வந்தவர்கள், அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். வந்த இடத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்தே த்விகாந்தோவின் சர்ச்சைப் பகுதிகளை நீக்கி விட தஸ்லிமா முடிவெடுத்ததாக தெரிகிறது.
தஸ்லிமாவின் முடிவு குறித்து ஜமாத் உல் உலமா ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளர் மதானி கூறுகையில், தஸ்லிமா தனது முடிவுப்படி நடந்து கொண்டால் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விடும் என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications