மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் குமாரதாஸ்
சென்னை: அதிமுகவில் கொஞ்ச காலம் இருந்து, ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டிருந்த கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளார். நேற்று அவர் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார்.
ஆரம்பத்தில் ஜனதாக் கட்சியில் இருந்தவர் குமாரதாஸ். பின்னர் அது ஜனதாதளமாக மாறியபோது அதில் இருந்தார். பிறகு காங்கிரஸில் இணைந்தார். அதிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அதில் இணைந்தார். பின்னர் தமாகா மீண்டும் காங்கிரஸில் சேர முடிவு செய்தபோது குமாரதாஸ் உள்ளிட்டோர் மட்டும் தொடர்ந்து தமாகாவை நடத்த முடிவு செய்தனர்.
தமாகா என்ற பெயரில் சட்டசபை அளவில் இருந்து வந்த கட்சிக்கு குமாரதாஸ் தலைவராக இருந்தார். பின்னர் சில ஆண்டுகள் முன்பு அவர் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் குமாரதாஸுக்கு பெரிய அளவில் பதவிகள் தரப்படவில்லை. குமரி மாவட்ட அதிமுக அவைத் தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக குமாரதாஸ் ஒதுக்கி ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அதிமுகவிலிருந்து விலகினார். டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்தார். தான் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக அறிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இணைந்தார். இனிமேல் தனது வாழ்நாள் முழுவதும் காங்கிரஸில்தான் இருப்பேன் எனவும், அதிமுகவில் இருந்த 3 ஆண்டு காலத்தையும் அசிங்கமாக நினைப்பதாகவும் குமாரதாஸ் கூறியுள்ளார்.
நாசே. ராமச்சந்திரனும் காங்.கில் ஐக்கியம்
அதேபோல பாஜக முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் நாசே. ராமச்சந்திரனும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications