For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு சக்கர வாகனத்தில் சேலை சிக்கி குழந்தை பலி

By Staff
Google Oneindia Tamil News


புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடும்பத்தோடு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மனைவியின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் குழந்தை இறந்துவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த வெள்ளைசாமி-சதீஸ்வரி தம்பதியின் மகள் தர்ஷினி.

வெள்ளைசாமி மனைவி, குழந்தையுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சதீஸ்வரியின் சேலை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது.

இதனால் சக்கரம் சுற்றுவது திடீரென நின்று மூவரும் கீழே விழுந்தனர். இதில் குழந்தை தர்ஷினிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தர்ஷினியை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை தர்ஷினி இறந்து விட்டாள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X