இனவெறியுடன் நான் நடந்து கொள்ளவில்லை - மலேசிய பிரதமர்

கோலாலம்பூர்: எனது அமைச்சரவையில் பாதிப் பேர் மலாய் மற்றும் முஸ்லீம் அல்லாத இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நான் இனப் பாகுபாடு காட்டுவதாக கூறுவது தவறானது என்று மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது அமைச்சரவையில் பாதிப் பேர் மலாய் இனத்தவரோ அல்லது முஸ்லீம் சமுதாயத்தினரோ அல்ல. எனவே நான் இன வெறியுடன், மத வெறியுடன் நடப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.
முன்பு நான் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் மலேசியாவின் அமைப்பு குறித்து உலக நாடுகள் சரியாக புரிந்து கொள்ளாத நிலையை உணர முடிந்தது. மேலும் மலேசிய அரசியல் குறித்தும் தவறான கருத்து வெளிநாடுகளில் நிலவுவதையும் அறிய முடிந்தது.
மலேசிய ஆளுங்கட்சியின் அதிகாரப் பகிர்வு குறித்த முழுமையான, உண்மையான நிலையை உலக நாடுகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை. இதற்கு முக்கியக் காரணம் அப்படிப்பட்ட அரசியல், அதிகார அமைப்புகள் அந்த நாடுகளில் இல்லாததே.
தங்களது குறைகளை விளக்கும் முகமாக பேரணி நடத்தப் போவதாக நவம்பர் 15ம் தேதி இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு அறிவித்தது. ஆனால் அது சட்ட விரோதம் என அரசு எச்சரித்தது. ஆனால் அதையும் மீறி அவர்கள் பேரணியை நடத்தினர். இதுதொடர்பாக 31 பேரை கைது செய்துள்ளோம்.
நாங்கள் இனப்படுகொலை செய்வதாக இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு குற்றம் சாட்டுகிறது. இது மிகவும் தவறானது. எனது அமைச்சரவையைப் பாருங்கள். அதில் பாதிப் பேர் மலாய் இனத்தவர்கள் கிடையாது, முஸ்லீம்கள் கிடையாது, ஆளும் ஐக்கிய மலாய் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடையாது.
ஒரு நாடு பிரச்சினையை சந்திக்கும்போது யாருக்கும் வெற்றியும் கிடைக்காது, தோல்வியும் கிடைக்காது. மாறாக அந்த நாடு முழுமையும் பாதிப்படையும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதனால்தான் நாட்டை அமைதியாக வைத்திருக்க சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிட்டது.
மலாய் இனத்தவர்களுக்கும், மற்ற இனத்தவர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. அது கெட்டுப் போக நாங்கள் விரும்பவில்லை. அது தொடர வேண்டும், அனைவரும் இணக்கமாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்றார் படாவி.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications