புலி ஆதரவு துண்டு பிரசுரங்கள்-பழ.நெடுமாறன் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
மதுரை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை வினியோகித்ததாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மீது மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன் தலைமையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த மே 31ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வினியோகித்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், 6 மாதங்கள் கழித்து இப்போது மதுரை மாநகர போலீசார் குற்றவியல் சட்டம் 13(1), 17(1) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் நெடுமாறன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications