'ராமநாதபுர கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை'
ராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்ட கடலோரப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் இல்லை என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய இடங்களில் ஏராளமான தீவுகள் உள்ளன. இந்த தீவுப்பகுதிகளில் விடுதலைப்புலிகள் இரவு நேரங்களில் அதிகமாக நடமாடுவதாகவும், அங்கு ஆயுதங்களை பதுக்கி வைத்து கடத்தி செல்வதாகவும் புலானாய்வுதுறை சிறப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கீழக்கரை பகுதியிலிருந்து படகில் சென்று தீவுகளில் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு விடுதலைப்புலிகள் வந்து சென்றதற்கோ, ஆயுதங்கள் பதுக்கி வைத்ததற்கோ எந்த தடயமும் கிடைக்காததால் அவர்கள் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் கீழக்கரை பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து உயர் அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் சோதனையிட்டனர்.
இதுகுறித்து உளவுப் பிரிவு போலீஸ் தரப்பில் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள், உளவுத்துறை, சுங்கத்துறை அதிகாரிகள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கீழக்கரை உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் விடுதலைப்புலிகள் யாரும் ஊடுருவியிருப்பதாக தெரியவில்லை. அந்தளவுக்கு மாவட்ட கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானதாகும்.
இருப்பினும் அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் இலங்கையிலிருந்து வரும் அகதிகள் ஒவ்வொருவரும் தீவிர விசாரணைக்கு பின்னரே முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 15 சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கடற்பகுதியில் அதி நவீன கருவிகளுடன் கடற்படை போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் விடுதலைப்புலிகள் ஊடுருவ வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications