For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா-டெல்லி ரயில் தடம் புரண்டு ஒருவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

Train

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரம்மபுத்திரா ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் பலியானார், மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த அந்த ரயில் மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பாய்குரி என்ற இடத்துக்கு அருகே நேற்றிரவு 11 மணிக்கு தடம் புரண்டது. 12 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிவிட்டன. இதில் 5 பெட்டிகள் கவிழ்ந்து அருகே உள்ள பெரிய கால்வாயில் விழுந்தன.

என்ஜினை ஒட்டி இருந்த 3 பெட்டிகள் தவிர மீதமிருந்த பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி கவிழ்ந்தன. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பயணி உயிரிழந்தார். இந்த விபத்தில் ஏசி பெட்டி தான் மிகுந்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 70 பேரில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. காயமடைந்தவர்கள் மேற்கு வங்கத்தின் வடக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X