'சொராபுதீன்': மோடி மீதான வழக்கு ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: போலி என்கவுண்டரில் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டது நியாயமானதுதான் என்று பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது ஷேக்கின் சகோதரர் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை வருகிற புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குஜராத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய நரேந்திர மோடி, போலி என்கவுண்டரில் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திப் பேசினார்.
இதையடுத்து ஷேக்கின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போலி என்கவுண்டரை ஆதரித்து முதல்வர் மோடி பேசியுள்ளார். எனவே அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தருண் சாட்டர்ஜி தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை வருகிற புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications