அரசு கிட்டங்கியில் இருந்து கடத்தப்பட்ட ரேசன் அரிசி பறிமுதல்
மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசு கிட்டங்கியில் இருந்து கடத்தப்பட்ட 1,065 மூட்டை ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் கூடல்நகரை அடுத்துள்ள பாசிங்காபுரம், குமாரம் பகுதிகளில் தனியார் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூட்டைகளை 2 வாரங்களுக்கு முன்னர் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில் மீண்டும் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மதுரையை அடுத்துள்ள ஐராவதநல்லூர் அருகேயுள்ள தனியார் அரிசி ஆலையில் திடீர் சோதனை நடத்தியதில் மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் அரசு கிட்டங்கியில் இருந்து தான் எடுத்து வரப்பட்டது கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
இந்த கிட்டங்கியிலிருந்து பாலீஷ் செய்ய அரிசி மூட்டைகளை தனியார் அரிசி ஆலைக்கு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.
லாரியில் ஏற்றப்பட்டிருந்த 511 மூட்டை ரேசன் அரிசியும், 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தனியார் அரிசி ஆலையில் பாலீஷ் செய்யப்பட்ட 554 ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட 1065 மூட்டை ரேசன் அரிசியையும் அரசு கிட்டங்கிக்கு கொண்டு சென்றனர். இந்த கடத்தல் தொடர்பாக லாரி டிரைவர் தங்கச்சாமி, கிளீனர் கார்த்திக் மற்றும் கடத்தல் ஏஜென்டுகள் விஜயன், அயூப்கான், சுமை தூக்கும் தொழிலாளிகள் ராமன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தனியார் அரிசி ஆலையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த அரிசி கடத்தலுக்கு அரசு கிட்டங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்களும், ரேசன் கடை ஊழியர்களும் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டால் இதுவரை எங்கெங்கு அரிசி கடத்தப்பட்டது என்பது தெரியவரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications