For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியின் சேலையில் தூக்கு போட்டு கணவர் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News


உடன்குடி: உடன்குடி அருகே மனைவியின் சேலையில் தூக்கு போட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

உடன்குடி அருகேயுள்ள மெஞ்ஞானபுரம், பிடாநேரி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி ஆனி என்ற மனைவி இருக்கிறார். ஆறுமுகம் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார்.

இதனால் ஆனி அடிக்கடி கோபித்து கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதும், பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் வந்து ஆறுமுகத்துடன் குடும்பம் நடத்துவதையும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு ஆறுமுகம் வழக்கம் போல் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் ஆனி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இரவு 9 மணி ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் மனமுடைந்த ஆறுமுகம் மனைவியின் சேலையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X