மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்!
மதுரை: தமிழகத்தில் தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு அரசு வழங்கி வந்த ஓய்வூதியத்துக்கு நீதிமன்றம் தடை விதித்ததால் நிதி உதவி தடை செய்யப்பட்டுள்ளது.
ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்களுக்கு கடந்த 1984 முதல் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000த்தை தமிழக அரசு நிதி உதவியாக வழங்கி வந்தது. மருத்துவ உதவியாக ரூ. 15ம் சேர்த்து வழங்கி வந்தது.
உதவி தொகையை பெறுபவர் இறந்து போகும் பட்சத்தில் அவர்களுடைய வாரிசு அல்லது மனைவிக்கு உதவி தொகையாக ரூ 1,515 வழங்கி வந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி வழங்குவது இந்திய ஒருமைப்பாடு கொள்ளைக்கு எதிரானது. தேசிய மொழியான ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி உதவி வழங்குவது சட்டப்படி தவறு. மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் பிரிவினை சக்தியை தூண்ட வழிவகுக்கும். எனவே மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடுத் துறை மூலம் அனைத்து மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications