குஜராத்: 16ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு- பிரச்சாரம் இன்று ஓய்வு

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
அகமதாபாத்: குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ளதையடுத்து இன்றுடன் அந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்கிறது.

குஜராத் மாநில சட்டசபையில் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக செளராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில் 87 தொகுதிகளுக்கு கடந்த 11ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

மீதமுள்ள 95 தொகுதிகளுக்கும் வரும் 16ம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. கடந்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் பாஜக மிகுந்த பலத்துடன் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 95 தொகுதிகளில் 73ல் பாஜக தான் வென்றது. கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் பயங்ரகர கலவரத்தை சந்தித்தவை இந்தப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட வாக்குப் பதிவைத் தொடர்ந்து நடந்த எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் தீவிரமாக மதவாதப் பிரச்சாரத்தில் மோடி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+