காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை - கடல் கொந்தளிப்பு

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்திருந்தது. சென்னை நகரில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதால் 2 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் நல்ல மழை இருக்கும் எனவும் பெரும்பாலான பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவிரி மாவட்டங்களில் பலத்த மழை:
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகியவற்றில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் அது பலத்த மழையாக மாறியுள்ளது.
இதன் காரணமாக 3 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில், 135 மில்லிமீட்டர் மழையும், சீர்காழியில் 130 மில்லிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 129 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
நாகப்பட்டனம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடியக்கரையில் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகே 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications