கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக ஹோமியோபதி டாக்டர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: மாட்டு வியாபாரியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக ஹோமியோபதி டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி. மாட்டு வியாபாரி. இவர் திருவேங்கடம் சாலையில் உள்ள ஹோமியோபதி டாக்டர் ராமையாவிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார்.
2 ஆண்டுகள் கழித்து பணத்தை கொடுத்து விட்டாராம். ஆனால் தனக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறி வேல்சாமியை டாக்டர் ராமையா மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து வேல்சாமி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து சங்கரன்கோவில் போலீசார் டாக்டர் ராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications