Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலியை மணக்க மாலையைத் துறந்த ஐயப்ப பக்தர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: காதலியை மணப்பதற்காக, போட்டிருந்த மாலையைக் கழற்றி விட்டு, காவல் நிலையத்தில் காதலியுடன் அடைக்கலம் புகுந்தார் ஐயப்ப பக்தர். பின்னர் கோவிலில் வைத்து இருவரும் கல்யாணமும் செய்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் ேசர்ந்தவர் செல்வம் (24). விவசாயிக் கூலியான இவருக்கும், நத்தம் அருகே உள்ள பரளிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கற்பகம் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ஆனால் இருவரும் வேறு வேறு சாதியைச் ேசர்ந்தவர்கள் என்பதால் வீட்டினர் கடுமையாக எதிர்த்தனர். இருந்தாலும் இருவரும் காதலைக் கைவிடவில்லை.

இந் நிலையில் சபரிமலைக்குப் போவதற்காக மாலை போட்டிருந்தார் செல்வம். இந்த சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செல்வத்தை சந்தித்த அவரது காதலி கற்பகம், தன்னை வேறு யாருக்கோ கட்டி வைக்க வீட்டில் முயற்சிப்பதாக கூறினார்.

இதையடுத்து செல்வம், மாலையைக் கழற்றி விட்டு காதலியுடன் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தார். போலீஸாரின் உதவியுடன் அருகில் உள்ள கோவிலில் வைத்து செல்வம்-கற்பகம் திருமணம் நடந்தது.

மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் காதல் கல்யாணம் செய்து வைப்பதில் சுத்துப்பட்டு கிராமங்களில் ரொம்ப பாப்புலராம். செல்வம்-கற்பகம் கல்யாணம், இந்தக் காவல் நிலையம் செய்து வைத்த 100வது காதல் கல்யாணமாம்.

காவலுக்கு ஜே.. காதலுக்கு ஜே. ஜே..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+