பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் அன்றாடம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலால் அதிபர் முஷாரப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கோஹட் என்ற இடத்தில் உள்ள ராணுவ பள்ளி மற்றும் கல்லூரி உள்ள இடத்திற்கு அருகில் இன்று மதியம் 12-30 மணிக்கு தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தது.
இதில் 11 அப்பாவி பொதுமக்கள் இறந்துவிட்டனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசர நிலை விலக்கப்பட்ட 2 தினங்களில் நடத்தப்பட்ட முதல் தற்கொலைப்படை தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications