வேனில் தீப்பிடித்து 8 ஐயப்ப பக்தர்கள் பலி
பாலக்காடு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போது கேஸ் கசிவு காரணமாக வேனில் தீப் பிடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேனில் சபரிமலை சென்றனர். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்றிரவு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இரவு 8 மணியளவில் பாலக்காடு அருகே வந்தபோது அந்த வேனில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. தீப்பிடித்த வேனை அந்த பகுதியில் இருந்தவர்கள் அணைக்க முயன்றும் பலனில்லாமல் போனது. வேன் டிரைவர் மட்டும் கீழே குதித்து தப்பி விட்டார்.
ஆனால் வேனுக்குள் இருந்த பக்தர்கள் பிரபாகர்(45), மஞ்சுநாத்(20), ஜெயவேல்(30), கணேஷ்(25), பாஸ்கர்(40), சந்திரன்(23), கவிதா(10) மற்றும் ஜோஸ்யா(7) ஆகியோர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். கணேசன் என்பவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த வேனில் கேஸ் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் கேஸ் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications