விமான தாக்குதலில் பிரபாகரன் காயமடையவில்லை: புலிகள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை விமானப்படையால் தாக்கப்பட்டார் என்பது பொய்யான தகவல் என்று எல்டிடிஈயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த மாதம் 28ம் தேதி இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது புலிகளின் பதுங்கு குழிகளும் குறி வைத்து தாக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் பதுங்கு குழியில் மறைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்தார் என்று இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.
இது குறித்து புலிகளின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
இலங்கை விமானப்படை தாக்குதலில் பிரபாகரன் தாக்கப்பட்டார் என்பது பொய்யான தகவல். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications