மீண்டும் ஆஸி. திரும்புவாரா ஹனீப்? வெள்ளிக்கிழமை தெரியும்

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: இந்திய டாக்டரும், தீவிரவாதி என சந்தேகத்திற்கு ஆளாகி சிறை சென்று மீண்டவருமான முகம்மது ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி பணியாற்ற அனுமதிப்பது தொடர்பான உத்தரவை வெள்ளிக்கிழமை பிரிஸ்பேன் உயர்நீதிமன்றம் அளிக்கவுள்ளது.

இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட சபீல் அகமது மற்றும் கபீல் அகமது ஆகியோருடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார் ஹனீப். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் விசாரணையில் அவருக்கும், கபீல் சகோதரர்களுக்கும் இடையே உறவினர்கள் என்ற தொடர்பைத் தவிர தீவிரவாத தாக்குதலில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார்.

இந்த நிலையில் ஹனீப்பின் பணி விசாவை ரத்து செய்த அப்போதைய ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் உத்தரவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட்டில் பிரிஸ்பேன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து முழு பெஞ்ச் முன்பு ஆஸ்திரேலிய அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மைக்கேல் பிளாக் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த தீர்ப்பு வருகிற வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது. எனவே ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி பணியாற்ற முடியுமா என்பது வெள்ளிக்கிழமை தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+