விலங்கியல் பூங்காவில் புகைப்படம் எடுத்தவரை குதறி கொன்ற புலிகள்
அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் உள்ள மிருக காட்சி சாலைக்கு ஜெய் பிரகாஷ் பெஸ்பருவா (50) என்பவர் தனது குடும்பத்துடன் வந்தார். அப்போது அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த 2 பெங்கால் ராயல் புலிகளை மிகவும் அருகே படம் எடுக்க நினைத்தார்.
இதனால் வேலிக்குள் கையை நுழைத்து புகைப்படம் எடுக்க முயன்றார். இதைப் பார்த்த பூங்கா ஊழியர்கள் அவரை எச்சரித்தனர். புலிகள் கடித்து விடும் என்று எச்சரித்தனர். ஆனாலும் கண்டுகொள்ளாத பரூவா, கூண்டுக்குள் கையை விட்டு புலிகளை படம் எடுக்க முயன்றார்.
ஆனால் அவர் படம் எடுக்கும் வரை அமைதியாக படுத்திருந்த திவ்யா, கோபரதன் என்ற இரு புலிகளும், திடீரென்று வெகுண்டெழுந்து அவரின் கையை பிடித்து குதறின. புலிகளின் இந்த செயலை பார்த்த உடன் வந்திருந்தவர்கள் கூச்சல் போட்டு அலறினர்.
ஜெயப்பிரகாஷோ புலிகளிடம் சிக்கித் துடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பெரிய பெரிய கம்புகளை எடுத்து இரு புலிகளையும் அடித்து விரட்ட முயன்றனர். ஆனாலும் விடாத இரு புலிகளும், பிரகாஷின் இடது கையை முழுமையாக கடித்துத் தின்று விட்டன.
புலிகளிடம் சிக்கி கையை இழந்த ஜெயப்பிரகாஷ் படுகாயமடைந்தார். அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.













Click it and Unblock the Notifications